கள்ளழகர் திருக்கோயில்

கள்ளழகர் கோயில்., 108 திவ்ய தேசக் கோயில்களில் ஒன்றான அழகர் கோயில் மதுரையிலுருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதப்பட்ட சங்க இலக்கியமான பரிபாடல் , சிலப்பரிகாரம், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இந்த மலையை பற்றி அப்பொழுதே வர்ணிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அபரஞ்சி தங்கம் எனப்படும் அரிய வகை தங்கத்தால் ஆன சுவாமி திருமேனிகள் இரண்டு கோவில்களில் மட்டும் தான் உள்ளது.
1 , திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்
2 , நம் கள்ளழகர் ( இங்கு ) .
இந்த அழகர் மலை 18 கிலோமீட்டர் நீளமும் 1049 அடி உயரமும் கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
இந்த மலைக்கு திருமாலிருன் சோலை, சோலைமலை, வனகிரி போன்ற பல பெயர்கள் உள்ளது.
இங்கு பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது.
கும்பாபிஷேகம் :
10.07.2011 ல் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம்( கும்பாபிஷேகம் ) சிறப்பாக நடைபெற்றது.
Back to previous page